V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Sunday, December 22, 2013

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்!


1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்

1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930

4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932 

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936

7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937

8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937

9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939

10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947

11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949

12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952

13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954

14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963

15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967

16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969

17. டாக்டர். கலைஞர் M
கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976

18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987

19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988

20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991

21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996

22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001

23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001

24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002

25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006

26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011

27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்


-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.

மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்

பொது அறிவு - தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தேசியகீதம் முதன் முதலில் ஜப்பானில்தான் தோன்றியது.

2. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 450 அடி நீளமுள்ள வலையைப் பின்னுகிறது.

3. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதல் தேதியை மீன்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

4. முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு அதன் வயதைக் கணிக்கிறார்கள்.

5. புல் வகையில் மிக உயரமாக வளரக்கூடியது மூங்கில். 36 மீட்டர் உயரம் வரை இது வளரும். ஒரு நாளைக்கு அரை மீட்டர் அளவு வளரும்.

6. மண்புழுவிற்கு கண்ணும் காதும் கிடையாது. ஆனால், ஒளியையும் அதிர்வையும் உணரக் கூடிய ஆற்றல் உண்டு.

7. "வீனஸ் கிர்டில்' என்பது நாடா போன்ற, இரண்டடி நீளமுடைய ஒரு வகை மீன். இது கடல் நீரில் பல நிறங்களில் தோன்றும். இதை, கிரேக்கர்களின் அழகுத் தேவதை அணியும் ஒட்டியாணம் என்று சொல்வார்கள்.

8. கண்ணாடி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், வெண்கலத் தகடுகள்தான் முகம் பார்க்கப் பயன்பட்டன.

9. நில நடுக்கத்தை அளக்கும் கருவிக்கு "ரிக்டர் ஸ்கேல்' என்று பெயர். சார்லஸ் ரிக்டர் எனும் அமெரிக்கரே இதைக் கண்டுபிடித்தார்.

10. "அறிவியலின் தந்தை' என்று போற்றப்படுபவர் கலிலியோ. இவர் இத்தாலிய வானியல் மேதை. தேவாலய விளக்கு காற்றில் அசைவதைப் பார்த்ததன் மூலம் - ஊசல் தத்துவம் எனும் பெரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.

11. "மேக்மா' என்பது பூமிக்குள் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பின் பெயர்.

12. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.

13. வளர்ச்சியடைந்த மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் இருக்கும்.

14. ஒரு மரத்தின் பெயரால் அழைக்கப்படும் நாடு "பிரேசில்.'
15. சவுதிஅரேபியா நாடு, பொதுமக்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதில்லை.
courtesy:betterjobsblogspot.com

Thursday, November 14, 2013

கண்டிப்பா இது உங்க கண்ணுக்கு ஒரு சவால்... ட்ரை செயஞ்சு பாருங்க...

கண்டிப்பா இது உங்க கண்ணுக்கு ஒரு சவால் தருகிற விளையாட்டு தான் கொஞ்சம்  பாருங்க..  ட்ரை செயஞ்சு பாருங்க...
ஸ்டேப் 1 – கீழ இருக்கிற பொண்ணோட மூக்கை ஒரு விடாம ஒரு 40 நொடி பாருங்க....
 
ஸ்டேப் 2 – அப்படியே வைச்ச கண் மாறாம பக்கத்துல இ ருக்கிற வெள்ளை பக்கத்த பாருங்க 
என்ன தெரியும் ?
கலர்புல்லா அந்த பொண்ணு தெரியுதா?
thanks to harry2g

Thursday, November 7, 2013

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,


 
 நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..        

உங்கள் கணினி விண்டோஸ் எக்ஸ்பி யா ? கவனம் !!!???

WINDOWS XP 


மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வழிகளைத் தருவதனை, வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. 

இதனால், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், முன்னதாகவே, வேறு விண்டோஸ் சிஸ்டங் களுக்கு மாறி வருகின்றனர்.

ஆனல், இன்னும் சிலர், எக்ஸ்பி சிஸ்டத்திலேயே நாம் இயங்கிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர். 
இந்நிலையில், கூகுள் நிறுவனம், எக்ஸ்பியில் தன் குரோம் பிரவுசர்களை இயக்கி வருபவர்களுக்கு, குரோம் பிரவுசருக்கு மட்டுமான பாதுகாப்பினை, 2015 ஏப்ரல் வரை வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது. 
இந்த ஏட்டிக்குப் போட்டி அறிவிப்புகளால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மைக்ரோசாப்ட் தன் பங்கிற்கு, குரோம் பிரவுசருக்கு மட்டும் பாதுகாப்பு கிடைத்தாலும், எக்ஸ்பி சிஸ்டத்தில் பாதுகாப்பு தரும் பைல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றால், நிச்சயம் ஹேக்கர்கள், உள்ளே நுழையும் அபாயம் எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
சென்ற 2001 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, வர்த்தக ரீதியாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. 2008 ஆம் ஆண்டில், இந்த விற்பனையை நிறுத்தியது. 
எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தொழில் நுட்ப ரீதியான உதவியை, மைக்ரோசாப்ட் அப்போதே நிறுத்திவிட்டது. இருப்பினும், தொடர்ந்து பாதுகாப்பு தரும் பைல்களை ஒவ்வொரு மாதமும் அப்டேட் செய்து வருகிறது. இதனையும் வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வழங்கப் போவதில்லை என இறுதியாகவும், உறுதியாகவும் அறிவித்துள்ளது.
ஆனால், கூகுள் இதனை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், குறிப்பாக நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் புரோகிராம்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டங்களில் சரியாக இயங்குவதில்லை எனத் தெரிவித்து, எக்ஸ்பி சிஸ்டங்களிலேயே அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் இதே போல் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். 
மால்வேர் புரோகிராம்கள், பெரும்பாலும், பிரவுசர்களையே குறிவைத்து வழி அமைப்பதால், தன் பிரவுசரான குரோம் பிரவுசரைப் பயன்படுத்துவோருக்குத் தான் பாதுகாப்பு வழிகளைத் தர கூகுள் முன்வந்துள்ளது. மைக்ரோசாப்ட் தரும் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னர், ஓராண்டுக்கு இதனைத் தர கூகுள் அறிவித்துள்ளது.
இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்துவோர், தன் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த முன்வருவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. 
ஆனால், பிரவுசர் அல்லாத வேறு வழிகளில் மால்வேர் புரோகிராம்கள் தங்கள் படையெடுப்பினை மேற்கொண்டால், என்ன செய்வது? மைக்ரோசாப்ட் கை கொடுக்காத வேளையில், எக்ஸ்பி பயன்படுத்துவோர் நிலை சற்று ஆபத்தானதுதான்
                                                                                                          (courtesy.therinjikko.blgst)

Friday, November 1, 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா? – அதை தெரிந்துகொள்ள‍ எளிய வழி

இந்த அவசர யுகத்தில் பெரிய பெரிய விஷயங்களை நினைவில் வைத் துக்கொண்டுள்ள நம்மால் சிறு சிறு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள‍ முடியவில்லை. உதாரணமா க வாகன எண்., வீட்டு கதவு எண்., கை பேசி எண்., வங்கி கணக்கு எண். போன் றவறை நமக்கு மறந்து விடுகிறது. முக்கியமாக நாம் யாருடனானவது பே சிக்கொண்டிருக்கும் போது அவ ர்கள் உங்களை கைபேசி எண்ணை கேட்பார்கள். அப்போது நமக்கு நமது கைபேசி எண்ணே மறந்துவிட்டு திருதிருவென விழிப்போ ம். எதிரே இருப்ப‍வர்கள் நம்மை பாரத்து சற் று ஏளனமாக சிரித்து விட்டு, என்ன‍ சார் உங்களுக்கு உங்க கைபேசி எண் கூடவா ஞாபகம் வைத்துக் கொள்ள‍ முடியவில்லை என்று கூறி விட்டு நம்மிடம் உள்ள‍ கை பேசி வாங்கி அதில் அவருடை ய எண்ணை அழுத்தி, அழைப்புக் கொடுப்பார். நமது கைபேசியின் எண். அவரது கைபேசி அழைப்பு வரும் போது அதில் நமது எண் பதிந்திருக்கும். உடனே அவர் அந்த பதிவான எண் ணை, உங்களது பெயரை போட்டு சேமித்துக்கொள்வார். ஆனால் ஒரு முறை இருமுறை என்றால் பரவா யில்லை, ஒவ்வொரு முறையும் இப்ப‍டி நடக்கும் நமக்கே அவமான மாகவே இருக்கும் அல்ல‍வா?

அந்தகுறையை போக்க‍ ஒரு எளிய முறை வந்துள்ள‍து. 
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு ரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தில் கைபேசி இருக்கிறதோ அந்த எண் ணின் கைபேசியில் அந் நிறுவனத்திற்கான ரகசிய குறி யீட்டை உங்கள் கைபேசியில் இட்டு அழைப்பு கொடுத் தால், சில விநாடிகளில் உங்களது கைபேசியில் உங்க ளது எண் தோன்றும். உடனே அந்த எண்ணை அவருக் கு சொல்லுங்கள்.
இதோ ஒவ்வொரு நிறுவனங்களுக்கான ரகசிய குறியீ டு
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப்பயன்படுத்துபவர்கள் *580# (thanks.vidhaivirucha.blgs.com)


ATM/CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கீழுள்ள‍ குறிப்புக் களை மிகுந்த கவனமுடன் படித்து அதன்படி கடைபிடித்தால், பின்னாளில் வரும் பாதிப்புக் களிலிருந்து நீங்கள் கொஞ்ச மாவது தப்பிக்க‍லாம்.
  1. ATM கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.
  2. கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
  3. நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணை கட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
  4. கார்டோடு பின் நம்பரை எழுதி வைக்காதீர்கள்.
  5. கார்டை பணம் எடுப்பதற்காக பிள்ளைகளிடம் கொடுத்தனுப்பாதீ ர்கள். கைபேசி, கணினி, போன்ற வற்றை கையாள்வதில் பிள்ளை கள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் விளையா ட்டுத் தனம் மற்றும் அலட்சியம் கவன திசை திரும்பல் இவற்றி ன் காரணமாக கார்டு போன்றவ ற்றை தொலைப்பதற்கு வாய்ப்பு கள் அதிகமாக இருக்கிறது
  6. வங்கிக் கணக்கு எண், வங்கியில் கொடுத்துள்ள வசிப்பிட முகவரி போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  7. ATMஇல் பணம் எடுக்கப்பட்டால் கைபேசியில் குறுஞ்செய்தி வரு ம் வசதியை கட்டாயம் பயன் படுத்துங்கள்
  8. கடைகளில் கார்டை பயன்படுத் தும்போது உடனிருந்து கவனியு ங்கள்
  9. கொடுக்கப்படும் ரசீதுகளை பத்தி ரமாக வைத்திருந்து PASS BOOK என்ட்ரி போட்டு சரி பார்க்கவும்.
  10. உங்கள் ATM கார்டு , கிரெடிட் கார்டு எங்களை தொலைபேசியில் யாரிடமும் சொல்லாதீர்கள். இணையத்தி லும் எக்காரணத்தைக் கொண்டும் இவற் றை தெரிவிக்காதீர்கள்.
  11. கார்டுகளை இருபுறமும் ஜெராக்ஸ் எடுத் து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இது வெளியில் யார் கைக்கும் கிடைத்து விடக் கூடாது.
  12. ATM/Credit Card விவரங்களை எல்லோரு க்கும் தெரியும் வண்ண ம் உங்கள் வீட்டில் கூட வைக்காதீர்கள்.
  13. அவ்வப்போது பின் நம்பர்களை மாற்றி விடுங்கள்
  14. ATM கவுண்டர்களில் முன்பின் தெரியாதவர்களின் உதவியை நாடா தீர்கள்
  15. கார்டு தொலைந்து விட்டால் வேலை நேர மாக இருந்தால் வங்கிக்கு நேரிலோ அல்ல து தொலை பெசியிலோ உடனடியாக தெரி வித்து விடுங்கள்
  16. மற்ற நேரங்களில் தொலைந்து விட்டால் ஒவ்வொரு வங்கிக்கும் அவசர உதவிக்காக Toll Free தொலைபேசி என்மூலம் தொடர்பு கொண்டு கார்டை ப்ளாக் செய்யலாம். இதற் கு சற்று பொறுமை அவசியம்                                                                (Thanks. vidhaivirutham.blgs.com

கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?


கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது. கேஸ் யாருடை ய பெயரில் உள்ள‍தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேப னை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமண மான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவ ரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெய ருக்கு மாற்ற‍ ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக‌ பெறவேண்டும்
வாங்கிய இந்த சான்றினை, உங்கள் குடும்ப அட்டையின் நகலுடன் சேர்த்து உங்கள் கேஸ் இணை ப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும். அதன்பி றகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர்,  உங்களுடைய பெயர் அல்ல து உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரி ல் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள் ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார் கள். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை யென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார் கள். இக்காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு வேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்கினீர்களோ அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசுச் சான்றிதழின் நகல் ஆகிய இரண்டையும் கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க‍ வேண்டும். 
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பதில்

வலைதள வாசக நண்பர்களுக்கு

அன்பார்ந்த வலைதள  வாசக நண்பர்களே !
      என்னால்  இயன்றவரை  நேரம்  கிடைக்கும் போதெல்லாம் மற்ற நான் பார்த்த, படித்த   நல்ல நல்ல செய்திகளை  / புகைபடைங்களை /  கணினி செய்திகளை  / ஜோக்ஸ்  ஆகியவை   நீங்களும்  பயன்பெறும்  நோக்கில் மட்டுமே  நான் அவ்வபோது தங்களிடம்  பகிர்ந்து வருகிறேன்.
             எனவே தாங்கள்  தங்கள்  ஆலோசனைகளையும் , கருத்துகளையும்
வழங்கினால் நான் மென்மேலும்   இதை தொடர வழிவகுக்கும்..

அதுமட்டும் அல்லாமல் நண்பர்களாகிய நீங்கள்  என் வலைத்தளத்தில் உறுப்பினர் ( மெம்பெர்) ஆக சேருங்கள்.

 வலைதள வாசக நண்பர்களுக்கு

 

பட்டாசு வெடிக்கிறீங்களா?

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அதிக ஒலி உடைய பட்டாசுகளை வெடிக்க கூடாது.

*  பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்க கூடாது.

* உடைந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வழக்கத்தை விட அதிக ஒலி ஏற்படும்.

* வீட்டின் பால்கனியில் நின்று பட்டாசு வெடிக்க கூடாது. அருகே உள்ள ஜன்னல், அலமாரியில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.


*  மது அருந்திவிட்டு பட்டாசு போடுவதை தவிர்க்க வேண்டும்.

*வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

தேங்க்ஸ்.

தித்திக்கும் தீபாவளி

தித்திக்கும் தீபாவளி

குட்டீஸ்களை பொறுத்தவரையில் தீபாவளி என்றாலே பட்டாசுதான். கலர் கலர் மத்தாப்பு, புஸ்வானம், நட்சத்திரங்களின் அழகை மிஞ்சம் பேன்ஷி
ராக்கெட்டுகள், சரவெடி, காதை பஞ்சராக்கும் அணுகுண்டு உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதில்தான் அலாதி ஆனந்தம்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் அட்வைஸ் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். வெடி வெடிக்கும் போது அருகில்
ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

உடையில் தீ பட்டாலோ, தீக்காயம் பட்டாலோ உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த பின் அவற்றை தெருவில் வீசி எறியாமல் தண்ணீரில் அணைத்தபிறகு குப்பை தொட்டியில் போடுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.

அதே சமயத்தில் அதிக ஒலியுடைய பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதிக ஒலியுடைய பட்டாசுகளை இரவு 10 வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி ஏற்படுத்தும் சரவெடி, அணுகுண்டு, லட்சுமி, குருவி வெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பது சட்டப்படி தவறாகும்.

அந்த நேரத்தில் ராக்கெட், சங்குசக்கரம், புஸ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.இதை மீறினால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும்.

அபராதமும் விதிக்கப்படும்.

இதுவே தண்டனை’ என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எனவே, இந்தாண்டு தீபாவளியை ஹேப்பியாகவும், பாதுகாக்கவும் கொண்டாடுங்கள்.
ஹேப்பி தீபாவளி!ஹேப்பி தீபாவளி!

 (வீர சாகசம் வேணாம்)
veera saagasam veyndaam...(nanbargaley)


Saturday, October 26, 2013

நேரம் சரியில்லையா ? சிந்தியுங்கள்!

நேரம் சரியில்லையா ? சிந்தியுங்கள்!

எனக்கு நேரம் சரியில்லை என்று முடங்கி கிடப்பது என்பது அனைவரது வாழ்கையிலும் வந்து செல்ல கூடிய ஒன்று.  அனைவருக்குமே ஒரே நேரம் தான் இந்த உலகத்தில் கொடுக்கபட்டிருக்கிறது அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதில்தான் நம்முடைய நேரம் சரியானதா அல்லது சரியில்லையா என்ற தீர்மானம் வருகிறது என்றுமே நம்முடன் அல்லது நாம் பழகுகின்ற மனிதர்களை பொருத்துதான் நமது வாழ்கையின் பாதை செல்கிறது நமது நேரமும் நமக்கு சாதகமாக இருக்கிறது. முதலில் நாம் நம்மை பற்றி மனசுத்தியுடன் தெரிந்து கொள்ளவேண்டும்.நாம் வாழ்வின் எந்த நிலையையும் அடைய முடியும் ஆனால் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளவது நாம் நல்ல நேரத்தை நோக்கி பயணிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலில் தேவையில்லாத நமக்கு  முற்றிலும் ஒவ்வாத செய்கைகளை நினைத்து பார்ப்பது தவிர்க்க வேண்டும்.எதை எப்போது செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்வது தான் நல்லது. நாம் நினைப்பது  செய்வதுதான் சரி என்ற நினைப்பை விட்டு விட்டு நாம் நினைப்பது சரியாக இருந்தாலும் அதை சிந்தித்து பிறகு செயலாக்கத்திற்கு கொண்டுவருவருவது நல்லது.அதிகம் போசுவதை விட அதிகம் கேட்பது நலம் எம்போதுமே எதிலுமே முதன்மையாக கருத்து சொல்லவதை தவிர்க்க வேண்டும்.எந்த ஒரு நிகழ்வையும் முற்றிலும் சரி என்று நினைத்தாலும் நிதானமாக செய்வதுதான் நன்று.நம்முடன் இருப்பவர்கள் அனைவருமே நம் நல்லதிற்காக நம்முடன் பழகுகிறார்கள் என்ற நினைப்பை தவிர்க்கவேண்டும். முக்கியமாக சிந்திக்காமல் கோபபடுவதை முற்றிலுமாக விலக்கவேண்டும்.நம்முடைய கோபம் எபோதுமே நமக்கு நல்லது செய்வது இல்லை.நமுடைய வாழ்வில் ஒரே வகையான  இக்கட்டான சூழ்நிலைகள் திரும்ப திரும்ப நிகழ்வது நம்மில் பலபேர் சந்தித்திருப்போம் ஆனால் நாமில் யாராவது ஏன் மீண்டும் மீண்டும் ஒரே வகையான இக்கட்டான சூழ்நிலைகள் நம்மை ஆட்கொள்கிறது என்று சிந்திக்க மறுக்கிறோம்.தற்காலிகமாக ஒருதீர்வைத்தான் நம்மில் அதிகமானவர்கள் நாடுகின்றோம், இதை போல் சூழ்நிலை மீண்டும் வராமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வை யார் சிந்திக்கிறார்களோ அவர்கள்தான் வாழ்கையில் நல்ல நேரத்தை சந்திக்கின்ற நபர்களாக, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள், இதைதான் நம் முன்னோர்கள் "ஒரு மாட்டிற்கு ஒரு சூடு என்று சொல்லுவார்கள்" ஒருமுறை நமக்கு ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையை மீண்டும் வராமல் பார்துகொள்ளவேண்டும் அதுதான் நமக்கு,நம் முன்னேற்றத்திற்கு நம் வாழ்வின் அமைதிக்கு வழி வகை செய்ய கூடிய நல்ல காரணியாக இருக்கும், மீண்டும் மீண்டும் நாம் வாழ்கையில் சூடு பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்கை பாடத்தை சரிவர புரித்துகொள்ளமலேயே மன அழுத்தத்திலேயே நாம் வாழ்கையை வாழவேண்டிவரும்.நம்முடைய பலத்தை பொறுத்துதான் நாம் தூக்கும் எடை அமையவேண்டும்,அதிக எடையை  தூக்க நினைப்பது தவறல்ல ஆனால் அதற்க்கு முன் நம் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வரவேண்டும் முதலில் எடையை  தூக்கிவிட்டு பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டையான துணிச்சலை முதலில் நம்மை விட்டு அகற்றவேண்டும்.எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் அமையும் என்ற தேவை இல்லாத கற்பனையைநிறுத்திவிட்டு வாழ்த்து பாருங்கள் .இதுதான் நல்ல நேரத்தை நோக்கி செல்வதற்கான முதல் படி.அம்பு ஒன்று நம்மை நோக்கிவருகிறது,அதற்கான கவசம் இல்லை  என்றால்அதன் பாதையை விட்டு விலகி எதிர்கொள்ளுவதுதான் நன்மையை தரும். நல்ல நேரத்தை நாம் தேடி செல்வதை விட எல்லா நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற சிந்திப்பது உங்கள் வாழ்கையில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும்.
 
courtesy:krishna.blogspot.

Thursday, October 17, 2013

alaikalikkapadum aadhaar...!!!???

தண்ணீர் காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்


சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஒரு முக்கியமான திர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தான் பொதுமக்கள் தங்கள் மானியத்திற்காக ஆதார் கார்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியது தான். ஆதார் கார்ட் இல்லாதவர்களுக்கும் மானியம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன தீர்ப்பு ஒரே நாளில் அரசின் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் பெரும் தோல்வியாக நாம் பார்க்க இடமளிக்கிறது.

இந்த தீர்ப்பினை எதிர்த்துப் போராட மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் அவர்களுக்கு விலை போன மீடியாக்கள் என்று ஒரு குழுவாக களத்தில் இறங்கி இந்த தடையை தளர்த்த போராடுகிறார்கள்

எதற்காக இந்த தடை?

சுப்ரீம் கோர்ட் கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

1. பொது மக்கள் எல்லோராலுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஆதார் அட்டையினை வாங்கிட முடியாது,
  - இது அரசின் புள்ளியல்  மற்றும் கணக்கெடுப்புத் துறையின் பலவீனமான செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

2. ஆதார் அட்டை வழங்குதலில் உள்ள முறைகேடு மற்றும் குழப்பங்கள்
- போலியான அட்டைகள், பணம் வாங்கிக் கொண்டு முறைகேடாகத் தரும் அட்டைகள் (ஆந்திராவின் ஒரு பகுதியில் ரூ.200/-க்கு முறைகேடான் ஆதார் அட்டை வழங்கிய கும்பல் போன மாதம் கைது), குளறுபடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அட்டைகள்(பெயர், போட்டோ மாறியிருத்தல் மிகச்சாதாரனமாக காணப்படுகிறது)
- எத்தனை பேருக்கு ஆதார் அட்டைக்கான சான்றுகள், விண்ணப்பிப்பதற்கான விடுப்புகள், வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? எத்தனை கிராமங்களில் வங்கிகள் இருக்கின்றன?

3.ஆதார் அட்டையினால் லாபம் அடைபவர்கள் யார் யார்..

மூன்றாம் கேள்விக்கான விடை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் காலில் வெந்நீர் ஊற்றியது போலே குதித்துக் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கவனித்தால், இவர்களுக்கு இருக்கும் நிஜ ஆதாயம் என்ன என்று புரியும்.

Economic Timesல் இந்த தீர்ப்பினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது, கள்ளச் சந்தையில் எல்.பி.ஜி சிலிண்டர்களை கட்டுப்படுத்தத் தவறினால் அரசுக்கு 01 பில்லியன் டாலர் வரை இறக்குமதி அதிகரிக்கும் என்று சொல்கிறது. இங்கே ஒரு லாஜிக்: ஆதார் கார்ட் உபயோகிப்பதால் எண்ணெய் இறக்குமதி குறையும் என்று எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் இந்நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது?. 

லாபம் இருக்கவே செய்கிறது!! அதாவது ஆதார் கார்டு வினியோகத்தில் உள்ள சாத்தியக் கூறு, இருக்கும் வாடிக்கையாளர்களில் ஒரு பத்து சதவீதம் பேரையாவது வடிகட்டி அவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலைக்கு கொடுக்க முடியும் என்பது அரசிற்கு ஒரு Extra Bonus. உங்கள் மாநகரங்களில் திடீரென்று முளைத்துள்ள சில தனியார் எல்.பீ.ஜி. கடைகளின் பெயர்கள் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?? Total Gas, Super Gas..இவர்களுக்கான புதிய சந்தைக்கு பயன்படும் ஒரு முக்கிய நபர் இந்த ஆதார்.  

அப்படியென்றால் அரசினால் ஆதார் கார்டு இல்லாமலேயே கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்த வேறு வழிகள் இல்லையா?? அரசு மட்டும் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாகவே RFID தொழில்நுட்பம் மூலம் வீட்டு நுகர்வுக்கு வரும் சிலிண்டரினை கள்ளச் சந்தையில் விற்பதை தடுத்திருக்க முடியும். ஏன் ஒட்டுமொத்த CIVIL SUPPLIESஐயும் கட்டுப்படுத்திட இந்த தொழில்நுட்பம் உதவும், ஆனால் அரசுக்கு இதன் மீதான் அக்கறை இல்லை என்பது மட்டும் உறுதி.

சரி இப்படி வைத்துக் கொள்வோம், முதலில் எல்.பீ.ஜிக்கான மானியத்தை இப்படி ஆதார் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்தால், அடுத்ததாக ஒட்டு மொத்த CIVIL SUPPLIESன் மானியங்களும் வங்கிகளுக்குமே வரவு வைக்கப் படும், நாம் அதை எடுத்துக் கொண்டு ரிலையன்ஸ் ஃப்ரஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது தீபாவளிக்கு வெளி வரும் திரைப்படத்தைக் கான் முன்பதிவோ செய்யக் கூடும்.

எல்லோரும் 1004 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிவிட வேண்டும், அரசு நாம் வாங்கியவுடன் 410.50 ரூபாயினை நம் வங்கியில் வரவு வைத்து விடும், இங்கே நாம் கவனமாக இருக்க வேண்டும், சரியாக குறைந்த வைப்புத் தொகையினை நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் மானியம் அபராதமாக வங்கிகளால் சுவாஹா செய்யப்படும். இதில் எத்தனை பேருக்கு எல்லா வங்கிகளிலும் NO FRILLS ACCOUNT இருக்கும் என்று தெரியும்?? ஆனால் NO FRILLS ACCOUNTஇனை வையர் ட்ரான்ஸ்பருக்குப் பயன்படுத்த முடியுமா என்று தெரியாது? மானியத்திர்காக மட்டும் வங்கிகளுக்குள் முதன் முறை நுழைபவர்களுக்கெல்லாம் ATM கட்டணங்கள், இதர வங்கிச் சேவை கட்டணங்கள் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படுமா??

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் ஆதார் கார்டு இந்திய அரசியல் சாசனத்தின் 14,20 மற்றும் 21ஆம் பிரிவுகளுக்கு எதிரானது (Right to equality, live and liberty) என்பதை, ஆக இதற்கெதிரான பிரச்சாரம் மிக அத்தியாவசியமாகிறது

மராட்டிய மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லையெனில் திருமணப் பதிவு ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று அரசு கூறியுள்ளது ஒருவேளை மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் யுக்தியா என்று தெரியவில்லை.
வரும் அக்டோபர் 22ம் தியதியில் வரும் தீர்ப்பினைச் சார்ந்து தான் இதன் முடிவு எப்படி இருக்கும் என்று யோசிக்க இயலும். அதுவரை எண்ணெய் நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு அஞ்சப் போவதில்லை...

Saturday, September 21, 2013

READ...........PLEASE...........SMILE............ PLEASE.................

பென் டிரைவுக்கும் ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!

1.      என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான்
அப்படியா! திரும்பி உன் முகத்தை காட்டு! சாகட்டும் தறுதலை!
2.      உன் படிப்பின் மேல யாருக்கு அக்கறை அதிகம்?
 பஸ் கண்டக்டருக்குத்தான் டீச்சர்!
  எப்படி?
  அவர்தான் தினமும் நீ பாஸா! பாஸான்னு கேட்கிறாரே!
3.பியுட்டி பார்லரின் வாசலில் காணப்பட்ட வாசகம்!
   இங்கிருந்து வெளியே போகும் பெண்களை சைட் அடிக்காதீர்கள். போவது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!
4.பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
தெரியலையே!
 இரண்டையும் திருத்தவே முடியாது!
5.தண்ணியிலே இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
அப்படி எடுக்கலேன்னா குளிக்கும் போது ஷாக் அடிக்கும்!
6.ஏதாவது ஒருவார்த்தை சொல்லு அதில சந்தோஷமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும்!
“ஐ லவ் யூ அண்ணா!”
7.உனக்குப் பார்த்த பொண்ணு லட்டு மாதிரி இருப்பான்னு சொல்றே! ஆனா ஏன் வேண்டாம்னு சொல்லிட்டே?
எனக்கு சுகர் கம்ப்ளெயின்ட் இருக்கே!
8.நம்ம ஆஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் டயலாக் சொல்லு?
கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
9.உங்க கடையில எல்லா பன்னும் கிடைக்குமா?
  கிடைக்குமே!
ஒரு கிலோ ரிப்பன் கொடுங்க!

10.கடவுள் ஆணா பெண்ணா?
ஆண் தான் சார்! ஏன்னா பூஜா, ஆர்த்தி, அர்ச்சனா, ஆராதனா, கீர்த்தனா, ஜோதின்னு விரும்பறாரே!
11.ஏண்டா மச்சி ரொம்ப நாளா போன் பண்ணவே இல்லை?
 பேலன்ஸ் இல்லைடா!
பேலன்ஸ் இல்லைன்னா தூண்ல சாய்ஞ்சுகிட்டு பேசவேண்டியதுதானே!
12.பஸ்ல ஒரு சீட் இருந்தும் ஒரு பொண்ணு உக்காரலை ஏன்?
  அந்த பொண்ணு பேரு ”அமரா”வதி!
 13.ஏங்க நம்ம கல்யாண பத்திரிக்கையை ரொம்ப நேரமா உத்து பார்த்துகிட்டு இருக்கீங்க?
  எக்ஸ்பயரி டேட் ஏதாவது போட்டிருக்கான்னு பார்க்கிறேன்!
 14.குண்டூசி எவ்வளோ ஒல்லியா இருக்கு! அப்புறம் ஏன் அதை  குண்டூசின்னு சொல்றோம்?
 15.ஒரு அரக்கன் அரக்கியோட கோயிலுக்கு போனான். ஆனா கோயில் கதவை திறக்க முடியலை. ஏன்?
அர- கீ- யோடதான போனான் முழு கீயோட போகலையே!

16.முத்துசாமிக்கு எதிர்ச் சொல் என்ன?
 முத்து see மீ இதுக்குத்தான் கிராமர் சரியா கத்துக்கணும்னு சொல்றது!
 17.ஒரு கேர்ள் வண்டி ஓட்டுனா அதை கம்ப்யூட்டர் லேங்வேஜ்ல எப்படி சொல்வாங்க?
”பென் டிரைவ்”னு சொல்லுவாங்க!
 18.ஒரு ரூம்ல மூணு டீச்சர் உட்கார்ந்திட்டிருந்தாங்க! ஒருத்தர் தமிழ் டீச்சர், இன்னொருத்தர் கணக்கு டீச்சர், அடுத்தது இங்கிலீஷ் டீச்சர். திடீர்னு திருடன் அந்த ரூம்ல புகுந்துட்டான் அப்ப இங்கிலீஷ் டீச்சர் தீஃப் தீஃப் அப்படின்னு கத்தினாங்க! தமிழ் டீச்சர் திருடன் திருடன்னு கத்தினாங்க! மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க?
தெரியலையே!
  420! 420!னு கத்துவாங்க!
19.உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்ன அர்த்தம்?
தெரியலை!
உனக்கு பின்னாடி நான் நிற்கிறென்னு அர்த்தம்!
 20.என்னப்பா! மாத்திரையோட சைடையெல்லாம் வெட்டிக்கிட்டு இருக்கே!
 அதுவா மாத்திரையை சாப்பிட்டா எந்த சைடு எஃபெக்டும் வரக்கூடாது பாருங்க!                                              (courtesy:thalirblospot)

Monday, September 16, 2013

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

நம் இணையத்தில் பல ஆயிரகணக்கான இலவச மென்பொருள்கள் உள்ளன .

courtesy  alliswellfriends
 
இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது.
எனவே பாதுகாப்பான 10 தளங்களை உங்களுக்காக வரிசைபடுத்தி உள்ளேன் .
1. CNET  

முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com
2. BROTHER SOFT 
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.brothersoft.com/
3. SOFTPEDIA 
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/
4. FILE HIPPO 

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது.  இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/
5. ZDNET 

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/
6. FREE DOWNLOAD CENTER

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/
7. DL 4 ALL

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.
8. DOWNLOAD ATOZ

இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/
9. SOFT32
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/
10. DOWNLOAD 3000 
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றவேண்டுமா

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றவேண்டுமா


அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.

அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code

தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)

உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.

அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.

இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.                                                                                                                                                              courtesy;alliswellfriendzblogspot

Saturday, September 14, 2013

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

நாம் நமது கணினியில் பல முக்கியமான கோப்புகளை வைத்திருப்போம் . நாம் கஷ்டபட்டு சேமித்த பல மென்பொருள்கள் நமது கணினியில் வைத்திருப்போம் .இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் HARD DISK பார்மட் ஆகலாம் . அல்லது தவறாக நாமே அழித்துவிடலாம் . அல்லது வைரஸ் பிரச்சனையில் அழியலாம். இது போன்ற சூழலில் நாம் அழிந்த கோப்புகளை திரும்ப பெற உதவும் மென்பொருள் MiniTool Power Data Recovery Software. இது ரூபாய் 2000 மதிப்புடையது .நமது CHENNAI GRAPHIX  வாசகர்களுக்காக இலவசமாக வழங்குவதில் பெருமை .
1. கிழே உள்ள டவுன் லோட் லிங்க்இல MiniTool Power Data Recovery Software தரவிறக்கி கொள்ளவும் .

2. அதில் SETUP.EXE முலம் INSTALL செய்யவும் .

 
3. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்யவும் .



4. மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . அதில் நீங்கள் தவறுதலாக அழித்த கோப்புகள் தெரியும் .

5. இந்த மென்பொருளை முழுமையான பயன்பாடுகளுடன் பயன்படுத்த அதை REGISTER செய்ய வேண்டும் . கீழே  உள்ள SERIAL KEY FOR MiniTool Power Data Recovery Software என்ற WORD DOCUMENT இல உள்ள SERIAL KEY பயன்படுத்துங்கள் .





மென்பொருள் தரவிறக்க (For Download ) : MiniTool Power Data Recovery


Serial Key Download :   Serial key for Minitoll Data Recover


டிஸ்கி : இந்த பதிவு பிடித்திருந்தால் G+, FACEBOOK, TWITTER இல் பகிரவும் .


டிஸ்கி : முன்பு ஒருமுறை FOLDERLOCK 7 இதுப்போல வெளியிட்டேன் . சமிபத்தில் கூகிள்காரன் ஒரு கடிதம் அனுப்பி அதை எடுக்க சொன்னான் . எனவே இதையும் எடுக்க சொல்லலாம் எனவே உடனே பதிவிறக்கி கொள்ளவும்