V

SSLC MARK 2012- CHENNAI GRAPHIX

mba.basheer

Welcome to my website. join with us

quick search

Thursday, November 14, 2013

கண்டிப்பா இது உங்க கண்ணுக்கு ஒரு சவால்... ட்ரை செயஞ்சு பாருங்க...

கண்டிப்பா இது உங்க கண்ணுக்கு ஒரு சவால் தருகிற விளையாட்டு தான் கொஞ்சம்  பாருங்க..  ட்ரை செயஞ்சு பாருங்க...
ஸ்டேப் 1 – கீழ இருக்கிற பொண்ணோட மூக்கை ஒரு விடாம ஒரு 40 நொடி பாருங்க....
 
ஸ்டேப் 2 – அப்படியே வைச்ச கண் மாறாம பக்கத்துல இ ருக்கிற வெள்ளை பக்கத்த பாருங்க 
என்ன தெரியும் ?
கலர்புல்லா அந்த பொண்ணு தெரியுதா?
thanks to harry2g

Thursday, November 7, 2013

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,


 
 நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..        

உங்கள் கணினி விண்டோஸ் எக்ஸ்பி யா ? கவனம் !!!???

WINDOWS XP 


மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வழிகளைத் தருவதனை, வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. 

இதனால், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், முன்னதாகவே, வேறு விண்டோஸ் சிஸ்டங் களுக்கு மாறி வருகின்றனர்.

ஆனல், இன்னும் சிலர், எக்ஸ்பி சிஸ்டத்திலேயே நாம் இயங்கிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உள்ளனர். 
இந்நிலையில், கூகுள் நிறுவனம், எக்ஸ்பியில் தன் குரோம் பிரவுசர்களை இயக்கி வருபவர்களுக்கு, குரோம் பிரவுசருக்கு மட்டுமான பாதுகாப்பினை, 2015 ஏப்ரல் வரை வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது. 
இந்த ஏட்டிக்குப் போட்டி அறிவிப்புகளால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மைக்ரோசாப்ட் தன் பங்கிற்கு, குரோம் பிரவுசருக்கு மட்டும் பாதுகாப்பு கிடைத்தாலும், எக்ஸ்பி சிஸ்டத்தில் பாதுகாப்பு தரும் பைல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றால், நிச்சயம் ஹேக்கர்கள், உள்ளே நுழையும் அபாயம் எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
சென்ற 2001 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, வர்த்தக ரீதியாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. 2008 ஆம் ஆண்டில், இந்த விற்பனையை நிறுத்தியது. 
எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தொழில் நுட்ப ரீதியான உதவியை, மைக்ரோசாப்ட் அப்போதே நிறுத்திவிட்டது. இருப்பினும், தொடர்ந்து பாதுகாப்பு தரும் பைல்களை ஒவ்வொரு மாதமும் அப்டேட் செய்து வருகிறது. இதனையும் வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வழங்கப் போவதில்லை என இறுதியாகவும், உறுதியாகவும் அறிவித்துள்ளது.
ஆனால், கூகுள் இதனை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், குறிப்பாக நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் புரோகிராம்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டங்களில் சரியாக இயங்குவதில்லை எனத் தெரிவித்து, எக்ஸ்பி சிஸ்டங்களிலேயே அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் இதே போல் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். 
மால்வேர் புரோகிராம்கள், பெரும்பாலும், பிரவுசர்களையே குறிவைத்து வழி அமைப்பதால், தன் பிரவுசரான குரோம் பிரவுசரைப் பயன்படுத்துவோருக்குத் தான் பாதுகாப்பு வழிகளைத் தர கூகுள் முன்வந்துள்ளது. மைக்ரோசாப்ட் தரும் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னர், ஓராண்டுக்கு இதனைத் தர கூகுள் அறிவித்துள்ளது.
இதன் மூலம் விண்டோஸ் எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்துவோர், தன் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த முன்வருவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது. 
ஆனால், பிரவுசர் அல்லாத வேறு வழிகளில் மால்வேர் புரோகிராம்கள் தங்கள் படையெடுப்பினை மேற்கொண்டால், என்ன செய்வது? மைக்ரோசாப்ட் கை கொடுக்காத வேளையில், எக்ஸ்பி பயன்படுத்துவோர் நிலை சற்று ஆபத்தானதுதான்
                                                                                                          (courtesy.therinjikko.blgst)

Friday, November 1, 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா? – அதை தெரிந்துகொள்ள‍ எளிய வழி

இந்த அவசர யுகத்தில் பெரிய பெரிய விஷயங்களை நினைவில் வைத் துக்கொண்டுள்ள நம்மால் சிறு சிறு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள‍ முடியவில்லை. உதாரணமா க வாகன எண்., வீட்டு கதவு எண்., கை பேசி எண்., வங்கி கணக்கு எண். போன் றவறை நமக்கு மறந்து விடுகிறது. முக்கியமாக நாம் யாருடனானவது பே சிக்கொண்டிருக்கும் போது அவ ர்கள் உங்களை கைபேசி எண்ணை கேட்பார்கள். அப்போது நமக்கு நமது கைபேசி எண்ணே மறந்துவிட்டு திருதிருவென விழிப்போ ம். எதிரே இருப்ப‍வர்கள் நம்மை பாரத்து சற் று ஏளனமாக சிரித்து விட்டு, என்ன‍ சார் உங்களுக்கு உங்க கைபேசி எண் கூடவா ஞாபகம் வைத்துக் கொள்ள‍ முடியவில்லை என்று கூறி விட்டு நம்மிடம் உள்ள‍ கை பேசி வாங்கி அதில் அவருடை ய எண்ணை அழுத்தி, அழைப்புக் கொடுப்பார். நமது கைபேசியின் எண். அவரது கைபேசி அழைப்பு வரும் போது அதில் நமது எண் பதிந்திருக்கும். உடனே அவர் அந்த பதிவான எண் ணை, உங்களது பெயரை போட்டு சேமித்துக்கொள்வார். ஆனால் ஒரு முறை இருமுறை என்றால் பரவா யில்லை, ஒவ்வொரு முறையும் இப்ப‍டி நடக்கும் நமக்கே அவமான மாகவே இருக்கும் அல்ல‍வா?

அந்தகுறையை போக்க‍ ஒரு எளிய முறை வந்துள்ள‍து. 
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு ரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தில் கைபேசி இருக்கிறதோ அந்த எண் ணின் கைபேசியில் அந் நிறுவனத்திற்கான ரகசிய குறி யீட்டை உங்கள் கைபேசியில் இட்டு அழைப்பு கொடுத் தால், சில விநாடிகளில் உங்களது கைபேசியில் உங்க ளது எண் தோன்றும். உடனே அந்த எண்ணை அவருக் கு சொல்லுங்கள்.
இதோ ஒவ்வொரு நிறுவனங்களுக்கான ரகசிய குறியீ டு
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப்பயன்படுத்துபவர்கள் *580# (thanks.vidhaivirucha.blgs.com)


ATM/CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கீழுள்ள‍ குறிப்புக் களை மிகுந்த கவனமுடன் படித்து அதன்படி கடைபிடித்தால், பின்னாளில் வரும் பாதிப்புக் களிலிருந்து நீங்கள் கொஞ்ச மாவது தப்பிக்க‍லாம்.
  1. ATM கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.
  2. கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
  3. நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணை கட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
  4. கார்டோடு பின் நம்பரை எழுதி வைக்காதீர்கள்.
  5. கார்டை பணம் எடுப்பதற்காக பிள்ளைகளிடம் கொடுத்தனுப்பாதீ ர்கள். கைபேசி, கணினி, போன்ற வற்றை கையாள்வதில் பிள்ளை கள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் விளையா ட்டுத் தனம் மற்றும் அலட்சியம் கவன திசை திரும்பல் இவற்றி ன் காரணமாக கார்டு போன்றவ ற்றை தொலைப்பதற்கு வாய்ப்பு கள் அதிகமாக இருக்கிறது
  6. வங்கிக் கணக்கு எண், வங்கியில் கொடுத்துள்ள வசிப்பிட முகவரி போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  7. ATMஇல் பணம் எடுக்கப்பட்டால் கைபேசியில் குறுஞ்செய்தி வரு ம் வசதியை கட்டாயம் பயன் படுத்துங்கள்
  8. கடைகளில் கார்டை பயன்படுத் தும்போது உடனிருந்து கவனியு ங்கள்
  9. கொடுக்கப்படும் ரசீதுகளை பத்தி ரமாக வைத்திருந்து PASS BOOK என்ட்ரி போட்டு சரி பார்க்கவும்.
  10. உங்கள் ATM கார்டு , கிரெடிட் கார்டு எங்களை தொலைபேசியில் யாரிடமும் சொல்லாதீர்கள். இணையத்தி லும் எக்காரணத்தைக் கொண்டும் இவற் றை தெரிவிக்காதீர்கள்.
  11. கார்டுகளை இருபுறமும் ஜெராக்ஸ் எடுத் து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இது வெளியில் யார் கைக்கும் கிடைத்து விடக் கூடாது.
  12. ATM/Credit Card விவரங்களை எல்லோரு க்கும் தெரியும் வண்ண ம் உங்கள் வீட்டில் கூட வைக்காதீர்கள்.
  13. அவ்வப்போது பின் நம்பர்களை மாற்றி விடுங்கள்
  14. ATM கவுண்டர்களில் முன்பின் தெரியாதவர்களின் உதவியை நாடா தீர்கள்
  15. கார்டு தொலைந்து விட்டால் வேலை நேர மாக இருந்தால் வங்கிக்கு நேரிலோ அல்ல து தொலை பெசியிலோ உடனடியாக தெரி வித்து விடுங்கள்
  16. மற்ற நேரங்களில் தொலைந்து விட்டால் ஒவ்வொரு வங்கிக்கும் அவசர உதவிக்காக Toll Free தொலைபேசி என்மூலம் தொடர்பு கொண்டு கார்டை ப்ளாக் செய்யலாம். இதற் கு சற்று பொறுமை அவசியம்                                                                (Thanks. vidhaivirutham.blgs.com

கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?


கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது. கேஸ் யாருடை ய பெயரில் உள்ள‍தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேப னை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமண மான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவ ரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெய ருக்கு மாற்ற‍ ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக‌ பெறவேண்டும்
வாங்கிய இந்த சான்றினை, உங்கள் குடும்ப அட்டையின் நகலுடன் சேர்த்து உங்கள் கேஸ் இணை ப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும். அதன்பி றகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர்,  உங்களுடைய பெயர் அல்ல து உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரி ல் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள் ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார் கள். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை யென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார் கள். இக்காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு வேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்கினீர்களோ அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசுச் சான்றிதழின் நகல் ஆகிய இரண்டையும் கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க‍ வேண்டும். 
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பதில்

வலைதள வாசக நண்பர்களுக்கு

அன்பார்ந்த வலைதள  வாசக நண்பர்களே !
      என்னால்  இயன்றவரை  நேரம்  கிடைக்கும் போதெல்லாம் மற்ற நான் பார்த்த, படித்த   நல்ல நல்ல செய்திகளை  / புகைபடைங்களை /  கணினி செய்திகளை  / ஜோக்ஸ்  ஆகியவை   நீங்களும்  பயன்பெறும்  நோக்கில் மட்டுமே  நான் அவ்வபோது தங்களிடம்  பகிர்ந்து வருகிறேன்.
             எனவே தாங்கள்  தங்கள்  ஆலோசனைகளையும் , கருத்துகளையும்
வழங்கினால் நான் மென்மேலும்   இதை தொடர வழிவகுக்கும்..

அதுமட்டும் அல்லாமல் நண்பர்களாகிய நீங்கள்  என் வலைத்தளத்தில் உறுப்பினர் ( மெம்பெர்) ஆக சேருங்கள்.

 வலைதள வாசக நண்பர்களுக்கு

 

பட்டாசு வெடிக்கிறீங்களா?

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அதிக ஒலி உடைய பட்டாசுகளை வெடிக்க கூடாது.

*  பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்க கூடாது.

* உடைந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வழக்கத்தை விட அதிக ஒலி ஏற்படும்.

* வீட்டின் பால்கனியில் நின்று பட்டாசு வெடிக்க கூடாது. அருகே உள்ள ஜன்னல், அலமாரியில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.


*  மது அருந்திவிட்டு பட்டாசு போடுவதை தவிர்க்க வேண்டும்.

*வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

தேங்க்ஸ்.

தித்திக்கும் தீபாவளி

தித்திக்கும் தீபாவளி

குட்டீஸ்களை பொறுத்தவரையில் தீபாவளி என்றாலே பட்டாசுதான். கலர் கலர் மத்தாப்பு, புஸ்வானம், நட்சத்திரங்களின் அழகை மிஞ்சம் பேன்ஷி
ராக்கெட்டுகள், சரவெடி, காதை பஞ்சராக்கும் அணுகுண்டு உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதில்தான் அலாதி ஆனந்தம்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் அட்வைஸ் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். வெடி வெடிக்கும் போது அருகில்
ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

உடையில் தீ பட்டாலோ, தீக்காயம் பட்டாலோ உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த பின் அவற்றை தெருவில் வீசி எறியாமல் தண்ணீரில் அணைத்தபிறகு குப்பை தொட்டியில் போடுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.

அதே சமயத்தில் அதிக ஒலியுடைய பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதிக ஒலியுடைய பட்டாசுகளை இரவு 10 வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி ஏற்படுத்தும் சரவெடி, அணுகுண்டு, லட்சுமி, குருவி வெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பது சட்டப்படி தவறாகும்.

அந்த நேரத்தில் ராக்கெட், சங்குசக்கரம், புஸ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.இதை மீறினால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும்.

அபராதமும் விதிக்கப்படும்.

இதுவே தண்டனை’ என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எனவே, இந்தாண்டு தீபாவளியை ஹேப்பியாகவும், பாதுகாக்கவும் கொண்டாடுங்கள்.
ஹேப்பி தீபாவளி!ஹேப்பி தீபாவளி!

 (வீர சாகசம் வேணாம்)
veera saagasam veyndaam...(nanbargaley)